Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 5 January 2015

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்!

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இரத்தம் சுத்தமடைய:

காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:

கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு : தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குருவை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

தாது புஷ்டியாக

இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்

காதல் எப்போது , எங்கே , எந்த வயதில் பூக்கிறது ?

மனிதனாய் பிறந்த அனைவருக்குமே பருவ வயதில் காதல் பூப்பது உண்டு. பெரும்பாலானவர்களுக்கு கடைப் பதின்ம வயதிலும், இருபதுகளின் ஆரம்பத்திலும் காதல் பூப்பது உண்டு. சிலருக்கு எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பையே காதல் என்று நினைத்துவிட்டு, அனைவரிடமும் காதல் சொல்லி அடி வாங்குவதும் உண்டு. குறிப்பாக 13(teen age) வயதில் பருவ வயதை அடைந்ததும் ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிர்பாலினத்தின் மீதான ஒரு ஈர்ப்பு வந்துவிடும். ஆனால் சமூக, மன நலங்களால் அவர்கள் காதலில் ஈடுபடுவதில்லை.

பதின்ம வயது : பதின்ம வயதில் ஏற்படும் ஈர்ப்பு சிலருக்கு காதலாய் மாறும் ஆனால் அப்படியான முதல் காதல் அனைவருக்கும் வெற்றியாய் அமையாது. பதின்ம வயதில் ஏற்படும் காதல் வெற்றியளிக்காதமைக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சொல்லப் போனால் அது காதல் என்று சொல்வதை விடவும் அது ஓர் ஈர்ப்பு ( INFACTUATION ) எனத் தான் கூறவேண்டும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தை என்னும் நிலையில் இருந்து பெரியவர் என்ற நிலைக்கு ஒருவரைத் தயார்ப்படுத்தும் காலமே 13 -19 வரையிலான பருவ காலம். இக்காலத்தில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மனதை பல்வேறு வகையில் குழப்பி விடும். படிப்பில் கவனம் சிதறும், பெற்றோர் மீதும், நண்பர் மீதும் எரிச்சல் வரும். தமக்குப் பிடித்த தோழன்/தோழியோடு பழக வேண்டும் என்ற ஆவல் தூண்டப்படும். ஆனால் இந்தக் காலத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் இந்த பதின்ம வயதினைப் பக்குவமாக மனமும், உடலும் சிதையாமல் கடந்துவிட்டால் அதன் பின்னான காலம் நன்மையாக அமைந்துவிடும். பெரும்பாலானவர்களுக்கு இந்த பதின்ம வயதில் தான் படிப்புச் சிதறும் .

இப்படியாகத் தான் ஒவ்வொருவரின் வாழ்விலும் அந்த பதின்ம வயதில் ஏற்படும் சிறு பிசகும், வாழ்வையே மாற்றி விடுவதுண்டு. காதல் செய்வதோ, உலக விசயங்களை அறிந்துக் கொள்வதோ தவறு என்று சொல்லவில்லை. ஆனால் பதின்ம வயதில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என பலர் குழம்பி விடுவார்கள். சிலர் உடலையும், மனதையும் கெடுத்து விடுவார்கள். இது பிற்காலங்களில் பெரிய ஆறாவடுவாய் அவர்களின் மனதில் இருந்துவிடுவது உண்டு.


காதல் செய்யும் பருவம் : அப்போது காதல் செய்ய எது சரியான பருவம் எனக் கேட்கின்றீர்களா? காதல் செய்ய இது தான் சரியான பருவம் என்றில்லை. ஆனால் காதல் என்றால் என்ன ? திருமணம் என்றால் என்ன ? வாழ்க்கையினை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என அறிந்துக் கொள்ளும் போது தான் அதனால் பாதிப்புக்கள் வராது.

காதல் செய்வது எப்படி : குறிப்பாக பதின்ம வயதினைக் கடந்துவிட்டாலே ஓரளவுக்கு முதிர்ச்சி வந்துவிடும். காதல் யாருடன் எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் இவர் தான் நமக்கு சரியானவரா என ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துவிடுவது நல்லது. காதல் என்பது நீண்டகால COMMITMENT என்பதால் ஒருவர் மற்றொருவரை நன்கு அறிந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, நட்பாகி, காதலில் விழுந்தப் பின்னர் காதலர்கள் முக்கியமான பல முடிவுகளை எடுக்க வேண்டும்.

திட்டமிடல் : காதலிலும் குறுகிய காலத் திட்டங்கள், நீண்டக் காலத் திட்டங்கள் வகுத்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக இருவது வயதுப் ஆணும், பெண்ணும் நண்பர்களாகி, இருப்பத்தொரு வயதில் காதலர்களாகி விட்டால். அடுத்து என்ன செய்வது காதலர் என்ற நிலையில் இருந்து குடும்பத்தார் என்ற நிலைக்கு எப்படி வெற்றிகரமாக வாழ்வை மாற்றுவது என்ற திட்டமிடல் அவசியம்.  கல்வியை முடிப்பது, வேலைத் தேடுவது, திருமணத்துக்கான பணம் சேமிப்பது, பெற்றோரிடம் சம்மதம் வாங்குவது, சமூகத்தில் நல்ல முறையில் வாழ்வை தொடங்குவது என படிப்படியான திட்டங்களை வகுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

காதலில் எது முக்கியம் : காதலில் மிகவும் முக்கியமானது உண்மை. இருவரும் எதனையும் மறைத்தல் கூடாது. குறிப்பாக தம்மைப் பற்றிய வெளிப்படை உணர்வு மிகவும் அவசியம்.

இரண்டாவது பேசுதல், காதலர்கள் ஆனப் பின் காதல் வசனங்கள் மட்டும் பேசினால் போதாது, அதையும் தாண்டி வெளிப்படையான பேச்சு இருத்தல் வேண்டும். பிரச்சனைகள் எழும் போது பேசித் தீர்த்தல் அவசியம். காதலில் ஈகோவோ, பொறாமையோ கூடவே கூடாது. அப்படி உங்களது காதலர் மீது பொறாமை வந்துவிட்டால் அதனை அவரிடம் கூறிவிடுதல் மிகவும் அவசியம்.

மூன்றாவது மதித்தல், காதலர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனையும் தாண்டி காதலரின் பெற்றோர், குடும்பம் ( அவர்களை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் ), நம்பிக்கைகள், உணவுப் பழக்கங்கள், மத நம்பிக்கைகள் அனைத்தையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

காதலில் பார்க்கக் கூடாதவை : ஒருவரை உங்களுக்குப் பிடித்து விட்டது என்றால் அவரிடம் காதல் சொல்லுகின்றீர்கள். அவர்களுக்கும் உங்களைப் பிடித்து இருக்கின்றது என்றால். அன்று முதல் நீங்கள் காதலர் ஆகி விடுகின்றீர்கள். உடனேயே உங்களது மனத் தேவைகளையும், உடல் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அது உண்மையான காதலாக அமையாது. காதலர் ஆகும் வரை அவர்களை உயர்த்தி வைத்திருப்பீர்கள், ஆனால் காதலர் ஆனவுடம் எதோ அவர்கள் உங்களது அடிமைகளைப் போல நடத்தாதீர்கள். 

Friday, 2 January 2015

வீட்டு வைத்திய குறிப்புகள்!

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு
உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்
இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்
வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு
இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி
கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.